ஐபிஎல் அணி உரிமையாளர்களே சூதாடுவது கேவலமான செயல்! - ஷாரூக்

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் நடைபெற்றது தொடர்பாக 3 மூன்று கிரிக்கெட் வீரர்கள், பல தரகர்கள், தாரா சிங்கின் மகன் விண்டூ தாரா சிங் கைது செய்யப்பட்டனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்தரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக்கான் இதுகுறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "ஒருவர் சூதாடும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தாலும், அணியின் உரிமையாளராக இருக்கும் போது இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது என்று நான் நினைக்கிறேன்.
அணியின் உரிமையாளராக ஒருவர் இருக்கும் போது, விதிமுறைகளையும் அதில் உள்ள ஓட்டைகளையும் நன்கு அறிவார்கள். இதனை தவறாக பயன்படுத்துவது கேவலமான செயலாகும்.
ராஜ் குந்தர், சில்பா ஷெட்டியின் கணவர். ராஜ் எனது நண்பர்தான். நான் அவர்களுக்கு நெருக்கமானவன். நண்பர் என்பதற்காக கண்ணை மூடிக் கொண்டு எதையும் ஆதரிக்க மாட்டேன். இந்த குற்றச்சாட்டு குறித்து நாம் உடனடியாக ஒரு முடிவுக்கு வர முடியாது. அவர் இந்த பிரச்சினைகளை சட்டப்படி சந்திக்க வேண்டும். அதன் முடிவை ஏற்க வேண்டும்.
சூதாட்டத்தில் ஈடுபடுவது வெறுக்கத்தக்க செயல். சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்," என்றார்.












Click it and Unblock the Notifications