ரயிலில் விவசாயிக்கு அடி: செந்தூர் எக்ஸ்பிரஸ் டிடிஆர் மீது வழக்கு
நெல்லை: செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் விவசாயிடம் தகராறு செய்த டிக்கெட் பரிசோதகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே இந்திரா காலனி வடக்குதெருவை சேர்நதவர் சரவணன். விவசாயி. இவர் செய்துங்கநல்லூருக்கு பசஞ்சர் ரயிலுக்கு டிக்கெட் பெற்று கொண்டு செந்தூர் எக்ஸ்பிரஸில் ஏறியுள்ளார். அங்கிருந்த பயண சீட்டு பரிசோதகர் சுடலைமணி இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விவசாயி தன்னை டிடிஆர் அடித்து விட்டதாக கூறி சரவணன் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இந்த சம்பவம் குறித்து ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் பார்வதி விசாரணை நடத்தினார். இச்சம்பவத்தில் சரவணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் டிக்கெட் பரிசோதகர் சுடலைமணி மீது வழக்கு பதிவு செய்தனர். தன்னிடம் தேவையில்லாமல் தகராறுசெய்து பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி டிடிஆர் அளித்த புகாரின் பேரில் சரவணன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications