என் பிறந்தநாளுக்கு இன்னும் வாழ்த்துக்கள் வந்து குவிந்து கொண்டிருக்கிறது: கருணாநிதி
சென்னை: தனது 90வது பிறந்தநாள் முடிந்தும் இன்னும் வாழ்த்துக்கள் வந்து கொண்டிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஜூன் 3 அன்று எனது 90-வது பிறந்த நாளினை கழக உடன் பிறப்புகள் சீரோடும் சிறப்போடும் கொண்டாடினர். தமிழகத்தில் திமுகவை தாண்டி, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த தோழர்களும், தமிழ் மக்களும், தமிழ் ஆர்வலர்களும், தமிழ்க் கவிஞர் பெருமக்களும் எனது பிறந்த நாளையொட்டி பெருமை சேர்த்தனர்.
இந்தியத்துணை கண்டத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள், தேசிய அரசியல் தலைவர்கள் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்து என்னை ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள். எனது பிறந்த நாளையொட்டி உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் வாழ்த்துச் செய்திகளை கடிதம் மூலமாகவும், தந்தி மூலமாகவும், குறுஞ்செய்தி - இணையதளம் என்று இன்னும் அனுப்பிய வண்ணம் இருக்கிறார்கள்.
பிரிட்டன், அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, கனடா, நார்வே, சவுதி அரேபியா, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, சுவிடன், நெதர்லாந்து, போர்ச்சுக்கல், மெக்சிகோ, ஈரான், சீனா, தாய்லாந்து, குவைத் போன்ற பல்வேறு நாடுகளிலிருந்து இதுவரை 12 லட்சத்து 67 ஆயிரத்து 427 பேர் குறுஞ்செய்தி - இணையதளம் மூலம் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருக்கிறார்கள்.
மேலும் தபால் மூலமும், தந்தி மூலமும் 5 ஆயிரத்து 600 பேர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு இடங்களிலிருந்தும், உலகின் பல நாடுகளிலிருந்தும் எனது பிறந்த நாளினையொட்டி வாழ்த்துச் செய்திகளை அனுப்பி என்னை பெருமைப்படுத்தியிருக்கும் ஆன்றோர், சான்றோர், தமிழ் உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது இதய பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அளவிற்கு என்னிடத்தில் அன்பும், பாசமும் கொண்டுள்ளோருக்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேன் என்பது தான் என் உள்ளத்தை இப்போது முழுவதுமாக ஆக்கிரமித் திருக்கிறது. இது குறித்து தான் 5.6.2013 அன்று நான் எழுதிய உடன் பிறப்பு மடலில், இந்த அளவிற்கு என்னிடம் பாசத்தையும், அன்பையும் கொட்டுகிறார்களே, இவர்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? என்மனதாலும், செயலாலும் தொடர்ந்து உழைப்பேன், உழைப்பேன், தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன் என்று உறுதி கூறி எழுதியிருந்தேன். அந்த வாக்குறுதியை வெளிநாட்டில் வாழும் உடன் பிறப்புகளுக்கும் காணிக்கை ஆக்குகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம்












Click it and Unblock the Notifications