கனமழை: வெள்ளக்காடான மும்பை- இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பையில் இன்று காலை பெய்த கன மழையால் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மும்பையில் இன்று காலை கன மழை பெய்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாகின. இதையடுத்து சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பொய்வாடா, மாகிம் மற்றும் மதுங்கா பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் எப்பொழுதும் பிசியாக இருக்கும் கிழக்கு எக்ஸ்பிரஸ்வேயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் மத்திய மற்றும் ஹார்பர் லைன் ரயில்கள் 30 முதல் 40 நிமிடங்கள் தாமதமாக கிளம்பின. இது தவிர விரைவு ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்பட்டன.
மழையால் மும்பையில் இருந்து கிளம்பிய விமானங்கள் 30 நிமிடங்கள் தாமதாக கிளம்பிச் சென்றன.












Click it and Unblock the Notifications