சென்னை புறநகரில் பேய் மழை.. பலத்த காற்றுடன்!

தமிழகத்தில் பரவலாக கடலோரப் பகுதிகளில் இன்று மழை பெய்யலாம் என ஏற்கனவே வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று மாலை சென்னை புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.
தாம்பரம், குரோம்பேட்டை, மேடவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நல்ல காற்றுடன் பலத்த மழை பெய்ததால் ஊரே குளிர்ந்து போனது. விமான நிலையப் பகுதியில் சூறைக் காற்றுடன் பெய்த கன மழையால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் வழக்கம் போல மழை நீர் வெள்ளம் போல ஓடியதால் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனது. நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் நின்று பெரும் குளறுபடியானது.
இந்த திடீர் மழையால் புறநகர்ப் பகுதிகள் குளிர்ந்து போயுள்ளன. கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த மழை மக்களை மகிழ்வித்துள்ளது.
கத்திரி வெயில் முடிவுக்கு வந்தநிலையில் அவ்வப்போது சென்னையில் மழை எட்டிப் பார்ப்பதால் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications