நரேந்திர மோடி நியமனம் குறித்து நேரடியாக பதில் சொல்லாத ஜெ.!
சென்னை: சென்னை: நரேந்திர மோடிநியமனம் குறித்து நேரடியாக பதில் சொல்லாத முதல்வர் ஜெயலலிதா, அவர் எனது நண்பர் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் எப்போதுமே உண்டு என்று தெரிவித்தார்.
டெல்லி சென்ற முதல்வர் ஜெயலலிதா பாஜக தேர்தல் பிரச்சாரக்குழுத் தலைவராக மோடி நியமிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு இவ்வாறு தெரிவித்தார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் நீண்ட காலமாகவே நண்பர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் கூட்டணி பேச்சு வார்த்தை சூடுபிடித்துள்ளது. பாஜகவும் தேர்தல் வியூகங்கள் வகுத்து வரும் நிலையில், கோவாவில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் நரேந்திர மோடி பாஜக தேர்தல் பிரச்சார குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உள் கட்சி விவகாரம்
இந்த நியமனம் பற்றி டெல்லி சென்றுள்ள ஜெயலலிதாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், அது உட்கட்சி விவகாரம், அது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.

மோடி என் நண்பர்
தனிப்பட்ட முறையில் மோடி எனக்கு நல்ல நண்பர், அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் எப்பொழுதுமே உண்டு' என்றும் கூறினார். ஜெயலலிதா.

மோடி சிறந்த நிர்வாகி
மேலும், மோடி ஒரு சிறந்த நிர்வாகி குஜராத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லுபவர் அதனாலேயே மூன்று முறை முதல்வராக வெற்றி பெற்றுள்ளார் என்றும் ஜெயலலிதா புகழ்ந்தார்.

ஜெ விழாவில் மோடி
2011ல் ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பதவியேற்ற போது அந்த விழாவில் நரேந்திர மோடி கலந்துகொண்டார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவிலும் மோடி பங்கேற்றார்.

குஜராத்தில் ஜெ.
இதேபோல் நரேந்திர மோடி முதல்வராக பதவியேற்ற போது இரண்டு முறை ஜெயலலிதா கலந்து கொண்டிருக்கிறார். பாஜக உடன் கூட்டணியில் இணைந்தாலும், இல்லாவிட்டாலும் ஜெயலலிதா - மோடி இடையேயான நட்பு நீண்ட நாட்களாக தொடர்கிறது.












Click it and Unblock the Notifications