ஜியா கானை விட்டுவிட்டு வருமாறு சூரஜிடம் கூறினாரா சல்மான் கான்?
Subscribe to Oneindia Tamil

பாலிவுட் நடிகை ஜியா கான் நடிகர்களான ஆதித்யா பஞ்சோலி, ஜரினா வகாபின் மகன் சூரஜ் பஞ்சோலியை காதலித்தார். சூரஜ் தன்னை ஏமாற்றியது தாங்க முடியாமல் அவர் கடந்த 3ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சூரஜ் தன்னை கற்பழித்ததாகவும், கருவை கலைக்க வைத்ததாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும் அவர் சாகும் முன்பு எழுதி வைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து ஜியாவின் தாய் ராபியா கூறுகையில்,
சூரஜ் ஜியாவை காதலிப்பது ஆதித்யாவுக்கு பிடிக்கவில்லை. அவர் இது குறித்து சல்மான் கானிடம் தெரிவித்தார். சல்மான் சூரஜிடம் ஜியாவை விட்டுவிடுமாறு கூறியுள்ளார். ஆனால் சூரஜோ தான் ஜியாவை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து சல்மான் அமைதியாகிவிட்டார் என்றார்.












Click it and Unblock the Notifications