இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்டர்.. சிபிஐயிடம் சிக்குகிறார் உளவுத்துறை சிறப்பு இயக்குநர்!
அகமதாபாத்: குஜராத்தில் இளம் பெண் இஷ்ரத் ஜகான் உள்ளிட்டோர் போலி என்கவுகண்டரில் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு உளவுத்துறை அதிகாரிக்குத் தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
ஐபி எனப்படும் உளவுத்துறையில் பணியாற்றி வரும் முக்கியமான அதிகாரி அவர் என்று சிபிஐ கூறியுள்ளது.
அந்த அதிகாரிக்கு இந்த கொலையில் உள்ள தொடர்புக்கு போதுமான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் சிபிஐ கூறியுள்ளது.

19 வயது இளம் பெண்
2004ம் ஆண்டு குஜராத்தில் நடந்த போலி என்கவுண்டரில் 19 வயதான இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

உளவுத்துறை அதிகாரிக்குத் தொடர்பு
இந்த கொலையில் முக்கிய உளவுத்துறை அதிகாரிக்கு தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளதாக சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தெரிவித்துள்ளார்.

போதிய ஆதாரங்கள் சிக்கியுள்ளன
இதுகுறித்து சின்ஹா கூறுகையில், அந்த மூத்த உளவுத்துறை அதிகாரிக்கு உள்ள தொடர்புக்கான போதிய ஆதாரங்கள் சிக்கியுளஅளன. இதையடுத்து மேல் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார்
அந்த மூத்த உளவுத்துறை அதிகாரி அடுத்த மாதத்துடன் ஓய்வு பெறவுள்ளதாக கூறப்படுகிறது. அவரது பெயர் ராஜேந்திர குமார். தற்போது ஐபியின் சிறப்பு இயக்குநராக அவர் இருக்கிறார்.

ஏ.கே.47 துப்பாக்கியைக் கொடுத்தவர்
போலி என்கவுண்டர் நடந்த இடத்தில் ஒரு ஏ.கே. 47 துப்பாக்கியை கண்டுபிடித்ததாக போலீஸார் கூறியிருந்தனர். உண்மையில் அந்த துப்பாக்கியைக் கொடுத்தவரே இந்த ராஜேந்திரகுமார்தான் என்று சிபிஐ கூறுகிறது.

நேரடித் தொடர்பு
எனவே இந்தக் கொலையில் ராஜேந்திர குமாருக்கு நேரடி தொடர்பு இருப்பதாகவும், கொலைச் சதியிலும் அவருக்குத் தொடர்பு இருப்பதாகவும் சிபிஐ கூறுகிறது.

செவ்வாய்க்கிழமை விசாரணை
ராஜேந்திர குமாரை இன்று விசாரிக்க சிபிஐ முடிவு செய்திருந்தது. ஆனால் ராஜேந்திர குமாரின் தந்தைக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இஷ்ரத் உள்ளிட்டோர் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் முதல்வர் நரேந்திர மோடியைக் கொலைசெய்யும் திட்டத்துடன் அகமதாபாத் வந்தார்கள் என்றும் குஜராத் போலீஸ் கூறியது. ஆனால்இது போலி என்கவுண்டர் என்பது பின்னர் தெரிய வந்தது நினைவிருக்கலாம்.

சிபிஐக்கு குஜராத் உயர்நீதிமன்றம் கண்டனம்
இதற்கிடையே இந்த வழக்கில் சிபிஐக்கு குஜராத் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தேவையில்லாத விஷயங்களில்தான் சிபிஐ அதிக கவனம் செலுத்துகிறது. அதை விட்டு விட்டு விரைவில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யுமாறும், கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகளா அல்லது சாதாரண பிரஜைகளா என்பதை தெளிவாக தெரிவிக்குமாறும் சிபிஐக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
-
Vijay CBI: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு! டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! என்னென்ன கேள்விகள்? -
டெல்லிக்கு இனி கூப்பிடாதீங்க.. சிபிஐ, ஓய்வு பெற்ற நீதிபதிக்கு விஜய்யிடம் இருந்து பறந்த கடிதம்.. காரணம் என்ன? -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன்












Click it and Unblock the Notifications