ஸ்ரீசாந்த்துக்கு ஜெய்ப்பூர் ராஜகுமாரியுடன் சீக்கிரமே கால் கட்டு?
கொச்சி: சூதாட்ட சர்ச்சையில் சிக்கி ஜெயிலுக்குப் போய் திரும்பியுள்ள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்துக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்து திருமணத்தையும் நிச்சயம் செய்து விட்டனர்.
விரைவில் திருமணம் நடைபெறும் என்று தெரிகிறது. அதற்கு முன்பாக தனது அண்ணன் தீபுவுடன் ஐயப்பன் கோவிலுக்கு் செல்கிறார் ஸ்ரீசாந்த். அங்கு வழிபாடுகளை முடித்த பின்னர் அவரது திருமணம் குறித்த செய்தி வெளியாகும் என்று தெரிகிறது.
அனேகமாக செப்டம்பர் மாதம் ஓணம் பண்டிகையின்போது திருமணம் நடைபெறும் என்று தெரிகிறது.

ஜெய்ப்பூர் இளவரசி
ஜெய்ப்பூரைச் சேர்ந்த அரச குடும்பத்துப் பெண்ணைத்தான் ஸ்ரீசாந்த் மணக்கப் போவதாகவும் பேசப்படுகிறது.

குருவாயூரில்
குருவாயூரில் திருமணம் நடைபெறுவதை ஸ்ரீசாந்த் விரும்புகிறாராம். எனவே அங்கேயே நடக்கலாம் என்று தெரிகிறது.

யார் அந்தப் பெண்...
பெண் யார் என்பது குறித்து ஸ்ரீசாந்த் குடும்பத்தினர் வாய் திறக்கவில்லை. ஆனால் மலையாளி அல்லாத ஒரு குடும்பத்திலிருந்து ஸ்ரீசாந்த்தைக் கேட்டு அணுகியுள்ளதாக மட்டும் கூறியுள்ளனர்.

இன்னும் பெண்ணைப் பார்க்கலையே...
இதுகுறித்து ஸ்ரீசாந்த்தின் அக்காள் விதிதா கூறுகையில், நாங்கள் இன்னும் பெண்ணைப் பார்க்கவில்லை. ஆனால் அணுகியுள்ளனர். அதுகுறித்து பரிசீலித்து வருகிறோம் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications