தென் மேற்குப் பருவ மழை- இதுவரை 28% உபரி மழை
டெல்லி: தென் மேற்குப் பருவ மழை ஆரம்பமே அமர்க்களமாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதுவரை 28 சதவீத அளவுக்கு உபரியாகவே மழை பெய்துள்ளதாக வானிலை மையம் மகிழ்ச்சித் தகவலை வெளியி்ட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த பல மாதங்களாக நாடு முழுவதும் விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். காரணம், பருவ மழை பொய்த்ததால். விவசாயம் பாதிக்கப்பட்டதோடு உற்பத்தியும் பாதித்து, விலைவாசியும் விண்ணைத் தொட்டு விட்டது.
காய்கறிகள் பக்கம் போகவே முடியவி்ல்லை. சின்ன வெங்காயம் கெட்ட கேட்டுக்கு கிலோ 100 ரூபாய் என்று சொல்கிறார்கள். சமைக்கும்போது அழுது கொண்டே சமைக்கும் நிலையில் பெண்கள் உள்ளோம்.
இந்த நிலையி்ல சந்தோஷச் செய்தி ஒன்றை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதாவது வழக்கத்தை விட அதிகமாகவே தென் மேற்குப் பருவமழை பெய்து வருகிறதாம்.

ஆரம்பமே அமர்க்களம்ப்பா
தென் மேற்கு பருவ மழையின் தொடக்கமே அமர்க்களமாக இருப்பதாக கூறுகிறது வானிலை மையம்.

வழக்கமான மழை
வழக்கமாக நாடு முழுவதும் தென் மேற்குப் பருவ மழை மூலம் நமக்கு 98 சதவீத மழைப் பொழிவு கிடைக்கும். இந்த வருடம் அது முழுமையாக கிடைக்குமாம்.

2 வாரத்தில் 28 சதவீதம் எக்ஸ்ட்டிரா
சீசன் தொடங்கிய 2 வாரத்திலேயே 28 சதவீத உபரி மழை கிடைத்துள்ளதாம்.

78 சதவீத பகுதிகளில் உபரி மழை
36 உப கோட்டங்களின் 78 சதவீத பகுதிகளில் உபரி மழை பெய்துள்ளதாம்.

ஜூன் 1ல் 65 மில்லி மீட்டர்
மழைப் பொழிவு தொடங்கிய ஜூன் 1ம் தேதியன்று 65 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வழக்கமாக இது 50.6 மில்லிமீட்டராகத்தான் இருக்கும்.

ஜூலையில் 101 சதவீதமாகுமாம்
ஜூலை மாதத்தி்ல 101 சதவீத மழைப் பொழிவை எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

ஆகஸ்ட்டில் குறையும்
அதேசமயம், ஆகஸ்ட் மாதம் மழைப் பொழிவு 96 சதவீதமாக குறைந்து விடுமாம்.

வட மேற்கு இந்தியாவில் குறைவுதான்
அதேசமயம், வட மேற்கு இந்தியாவில் மழைப் பொழிவு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அங்கு குறைந்த அளவிலான மழையே பெய்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications