பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் - வைகோ

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
மக்கள் விரோத மத்திய அரசு பெட்ரோல் விலையை இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக லிட்டருக்கு ரூ.2.54 உயர்த்தி இருக்கின்றது. ஜூன் 1 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 பைசாவும், டீசல் விலை 50 பைசாவும் உயர்த்தப்பட்டது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து இருப்பதால், பெட்ரோல் விலை உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன.
ஒவ்வொரு முறை பெட்ரோல், டீசல் விலை அதிரிக்கப்படும் போது, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையையும், இந்திய ரூபாய் மதிப்புச் சரிவையும் காரணம் காட்டுவது மத்திய அரசின் வாடிக்கை ஆகிவிட்டது.
கட்டுப்பாடற்ற விலைவாசி உயர்வால் மக்கள் மிகவும் அவதிப்பட்டுள்ளனர். உணவு பணவீக்கம் மட்டும் 8.25 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் உணவுப் பொருட்களின் விலை கூடி உள்ளது. காய்கறிகளின் விலை விண்ணைத் தொட்டுவிட்டது. வெங்காயத்தின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துவிட்டது. மக்கள் மீது சுமையை ஏற்றுவதிலேயே குறியாக இருக்கும் மத்திய அரசு, விலைவாசியைக் குறைக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
மத்திய அரசு, பெட்ரோலியப் பொருட்களின் விலையை நிர்ணயித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிகாரம் வழங்கிவிட்டு, தனது பொறுப்பை தட்டிக் கழித்தது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு, மண் எண்ணெய் விலைகளை மத்திய அரசு உயர்த்திக்கொண்டே இருக்கும் நிலையில், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் ஒரு சிலரிடமிருந்து மிரட்டல் வருவதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடிவெடுக்கும் பெட்ரோலிய அமைச்சர் மிரட்டப்படுவதாக அத்துறையின் அமைச்சரே கூறுவது, கடுமையான குற்றச்சாட்டு ஆகும். இதற்கு மத்திய அரசு உரிய விளக்கம் தர வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வதிலும், எண்ணெய் இறக்குமதி செய்வதிலும் உள்ள முறைகேடுகள், பெட்ரோல் துறை அமைச்சரின் கூற்று மூலம் வெளிப்பட்டு இருக்கின்றது. மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள்தான் ரூபாயின் வீழ்ச்சிக்கும், விலைவாசி உயர்வுக்கும் காரணம் ஆகும்.
மீண்டும் மீண்டும் பெட்ரோல் விலை உயர்த்தப்படுவதால், விலைவாசி மேலும் அதிகரித்து, மக்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும். எனவே, மத்திய அரசு உடனடியாக பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications