வட இந்தியாவை திணறடிக்கும் கன மழை: உ.பி., டெல்லிக்கு வெள்ள எச்சரிக்கை
டெல்லி: வட இந்தியாவில் பல இடங்களில் கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வட இந்தியாவில் பருவமழை காலம் துவங்கிவிட்டது. பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் மட்டும் கன மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 50க அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மேலும் மழை தொடரும் என்பதால் மலை பிரதேசங்களில் நிலைமை மோசமடையக்கூடும். உத்தரபிரதேசம் மற்றும் டெல்லியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இமாச்சல் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 10 பேர் கன மழைக்கு பலியாகியுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் சஹரன்பூரில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 15 பேர் பலியாகினர்.

சஹரன்பூர்
சஹரன்பூரில் வெள்ளத்தில் நடந்து செல்லும் மக்கள்.

உத்தரகாசி
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வாகனங்கள்.

ஹரித்வார்
ஹரிவாரில் வெள்ளக்காடாக இருக்கும் சாலையில் செல்லும் மக்கள், வாகனங்கள்.

சேதமடைந்த பாலம்
அலக்நந்தா நதியின் மீது கட்டப்பட்டுள்ள பாலம் ருத்ரபிரயாகில் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது.

மும்பை
மும்பையில் பெய்த கனமழையால் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியது. அந்த தண்ணீரையும் தாண்டி ரயில் போக்குவரத்து நடைபெற்றது.

ரிஷிகேஷ்
ரிஷிகேஷில் கங்கை நதியில் வெள்ளப்பெருக்கெடுத்துள்ளதால் அங்குள்ள சிவபெருமானின் சிலையின் கழுத்தளவு வரை பாய்ந்து ஓடும் நீர்.












Click it and Unblock the Notifications