இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்டர் வழக்கு... ஐபி சிறப்பு இயக்குநரிடம் சிபிஐ விசாரணை

காந்தி நகரில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை கெஸ்ட்ஹவுஸில் வைத்து விசாரணை நடந்தது.
ஏற்கனவே ஒருமுறை ராஜேந்தர் குமார் விசாரிக்கப்பட்டுள்ளார். தற்போது 2வது முறையாக விசாரணை நடந்துள்ளது நினைவிருக்கலாம்.
2004ம் ஆண்டு ஜூன் 15ம் தேதியன்று போலி என்கவுண்டர் மூலம் குஜராத் போலீஸாரால் இஷ்ரத் உள்ளிட்ட ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இந்த கொலைச் சம்பவத்தில் குமாருக்குத் தொடர்பு இருப்பதாக சிபிஐ அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இதையடுத்து சிபிஐக்கும், ஐபிக்கும் இடையே கடும் பூசல் மூண்டது.
இருப்பினும் குமாருக்கு இந்த சம்பவத்தில் உள்ள தொடர்புகள் குறித்த ஆதாரம் இருப்பதாக சிபிஐ தெளிவுபடுத்தியது. இதை ஐபி தலைவரிடமும் சிபிஐ இயக்குநர் நேரில் சென்று விளக்கினார். இதையடுத்து ராஜேந்தர் குமார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இன்று 2வது முறையாக அவர் விசாரிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications