உதவிக்கு 5 அதிகாரிகள் குழு- உத்தர்காண்ட்டுக்கு அனுப்பினார் குஜராத் முதல்வர் மோடி!
அகமதாபாத்: பெருமழை வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோரின் கதி என்ன என்று தெரியாமல் தவித்து வருகிறது உத்தர்காண்ட் மாநிலம். அம்மாநிலத்தின் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு உதவும் வகையில் குஜராத் மாநில செயலர் நிலையிலான 5 அதிகாரிகளை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உத்தர்காண்ட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பேரழிவில் சிக்கியிருக்கும் உத்தர்காண்ட் முதல்வர் விஜய் பகுகுணாவை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு பணிகளுக்கான உதவி தேவை எனில் நிச்சயம் உதவுவோம் என்று கூறியிருந்தார்.
மோடி தமது ட்விட்டர் பக்கத்தில், உத்தர்காண்ட் மாநில முதல்வர் விஜய் பகுகுணாவிட வெள்ள சேத நிலைமை பற்றி கேட்டேன்..எந்த உதவி தேவைப்பட்டாலும் உதவ தயாராக இருக்கிறோம் என்றும் கூறினேன். அம்மாநிலத்தில் தவிக்கும் குஜராத் மக்களின் நிலைமை பற்றியும் கேட்டேன் என்று பதிவிட்டிருந்தார்.
நேற்றோ, உத்தர்காண்ட் மாநில வெள்ள சேதம் பற்றி பதிவிட்டதுடன் இந்த நேரத்தில் நாம் அனைவரும் அம்மாநில மக்களுக்கு உதவியாக இருப்போம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் உத்தர்காண்ட் மாநிலத்தின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு செயலர் நிலையிலான 5 அதிகாரிகளைக் கொண்ட குழு அந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் தற்போது பதிவிட்டிருக்கிறார் நரேந்திர மோடி!












Click it and Unblock the Notifications