ராஜஸ்தானில் 15 வயது சிறுமியை கற்பழித்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வாலிபர்
ஜெய்பூர்: ராஜஸ்தானில் 15 வயது சிறுமியை கற்பழித்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள ஆல்வாரைச் சேர்ந்த 15 வயது சிறுமியை வாலிபர் ஒருவர் கற்பழித்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அந்த சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது,
ஒரு வாலிபர் ஃபேஸ்புக் மூலம் எனது மகளுக்கு பழக்கமானார். சில மாதங்களுக்கு முன்பு அவர் என் மகளை கற்பழித்து அதை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை வைத்து அவர் எனது மகளை மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில் அவர் அண்மையில் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் அப்லோட் செய்துவிட்டார். அந்த வாலிபரின் பெயர் சமீர் குமார். அவர் ஆல்வாரைச் சேர்ந்தவர்.
அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications