வெள்ளம்..பேரழிவு..உத்தர்காண்ட் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிதி உதவி: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: பெருமழை மற்றும் வெள்ளத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் உத்தர்காண்ட் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிவாரண நிதி உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார்.

உத்தர்காண்ட் மாநிலமே வெள்ளக்காடாகி நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். புனித யாத்திரை தலங்கள் அதிகம் இருக்கும் பகுதி என்பதால் நாடு முழுவதும் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கானோர் ஆங்காங்கே மலைப் பகுதிகளில் தவியாய் தவித்து வருகின்றனர். இம்மாநிலத்தின் புனித தலமான கேதர்நாத் முற்றிலும் நிலைகுலைந்து போய்கிடக்கிறது.

Rs 1,000 crore for flood-hit Uttarakhand:PM

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பார்வையிட்டனர்.

பின்னர் டேராடூனில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் உத்தர்காண்ட் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிதி உதவி வழங்கப்படும். முதல் கட்டமாக ரூ145 உடனடியாக வழங்கப்படும் என்றார். மேலும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ2 லட்சமும் படுகாயமடைந்தோருக்கு ரூ50 ஆயிரம் நிவாரண உதவியும் வழங்கப்படும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+