அண்டாவுக்குள் தாலியை வைத்தாலும் திருடுகிறார்களே...!
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே அண்டாவுக்குள் 70 வயது மூதாட்டி மறைத்து வைத்திருந்த தாலியை சிலர் திருடிச் சென்று விட்டனர்.
அந்தப் பாட்டியின் பெயர் பாப்பாத்தி. இவர் தனது கணவருடன் குடிசையில் வசித்து வருகிறார்.திருட்டுப் பயம் காரணமாக தினசரி இரவு தனது தாலியை கழற்றி வீட்டில் உள்ள பித்தளை அண்டாவுக்குள் வைத்து விடுவார் பாப்பாத்தி. காலையில் எழுந்து அணிந்து கொள்வார்.
இநத் நிலையில் நேற்று காலை பக்கத்து வீட்டுக்குப் போன பாப்பாத்தி மீண்டும் வீட்டுக்கு வந்தார்,. அப்போது வீட்டுக்குள்ளிருந்து ஒரு இளைஞர் வெளியே ஓடினார். பதறிப் போய் அண்டாவைத் திறந்து பார்த்த பாப்பாத்தி, அதில் இருந்த தாலியைக் காணாமல் திடுக்கிட்டார்.
இதுகுறித்து அவரது கணவர் தேவராஜ் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் அண்டாவுக்குள் வைத்த தாலியைத் திருடிச் சென்ற நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications