வேட்பு மனுவை வாபஸ் பெற்றார் அதிமுகவின் தங்கமுத்து
Subscribe to Oneindia Tamil

முன்னதாக இவர் உள்பட ஐந்து வேட்பாளர்கள் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் சிபிஐ வேட்பாளர் டி.ராஜாவுக்கு அதிமுக தனது ஆதரவைத் தெரிவித்ததால், தங்கமுத்து வாபஸ் பெறுவார் என அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார்.
மேலும் தங்கமுத்துவுக்கு குடிசை மாற்று வாரியத் தலைவர் பதவி அளிக்கப்பட்டது. இதையடுத்து தங்கமுத்து இன்று தனது வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றார்.
தற்போது 7 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிமுக சார்பில் 4 பேரும், சிபிஐ, திமுக, தேமுதிக சார்பில் தலா ஒருவரும் போட்டிக் களத்தில் உள்ளனர்.
நாளையுடன் வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.












Click it and Unblock the Notifications