எங்க பெருந்தன்மை யாருக்கு வரும்.. வழக்கம் போல ஏர்போர்ட்டிலிருந்து நாராயணசாமி!

Subscribe to Oneindia Tamil

Narayanasamuy slams BJP
சென்னை: காங்கிரஸில் பாருங்கள், பிரதமர் பதவிக்கு பெருந்தன்மையுடன் ராகுல் காந்தியை அனைவரும் பரிந்துரைக்கிறோம். ஆனால் பாஜகவில் பெரும் அடிதடியே நடக்கிறது என்று கூறியுள்ளார் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி.

வழக்கம் போல சென்னை விமான நிலையத்தில் நின்றபடி அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதைத் தெரிவித்தார்.

இன்று சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பின் போது 2014-ம் ஆண்டு ராகுல் பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என்று மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

2004-ம் ஆண்டு பிரதமர் பதவியை மன்மோகன் சிங்குக்கு சோனியா கொடுத்தார். 2014-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு பிரதமர் பதவியை ராகுல் காந்தியிடம் மன்மோகன் சிங் ஒப்படைக்க உள்ளார். இந்த பெருந்தன்மை காங்கிரஸ் கட்சியில் மட்டுமே உள்ளது.

ஆனால் பாரதீய ஜனதா கட்சியில் பிரதமர் பதவிக்கு குடுமிபிடி சண்டை நடக்கிறது. மோடியை ஏற்க அத்வானி மறுக்கிறார். அத்வானியை ஏற்க மோடி மறுக்கிறார். அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோரும் பிரதமர் பதவிக்கு ஆசைப் படுகிறார்கள். இவர்களால் நாட்டு மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்றார் நாராயணசாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+