நிலக்கரி ஊழல்: முன்னாள் செயலாளர் ஹெச். சி. குப்தாவிடம் சிபிஐ விசாரணை

Subscribe to Oneindia Tamil

Coalgate: Former Coal Secy quizzed by CBI
டெல்லி: நிலக்கரி ஊழல் தொடர்பாக நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் ஹெச். சி. குப்தாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

2006ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்தது குறித்து சிபிஐ 13 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த காலகட்டத்தில் 151 நிறுவனங்களுக்கு 68 நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டன. இது குறித்த சில ஆவணங்கள் நிலக்கரித்துறை அமைச்சகத்தில் இருந்து மாயமாகின.

இந்த ஊழல் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர்கள் சந்தோஷ் பக்ரோடியா, தாசரி நாராயண ராவ், காங்கிரஸ் எம்.பி. விஜய் தார்தா ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. இந்நிலையில் நிலக்கரி சுரங்க ஊழல் நடந்தபோது நிலக்கரித்துறை செயலாளராக இருந்த ஹெச்.சி. குப்தாவிடம் விசாரணை நடத்த மத்திய அரசிடம் சிபிஐ அனுமதி கேட்டது. ஆனால் மத்திய அரசோ குப்தா இந்திய வர்த்தகப் போட்டி ஆணையத்தின் உறுப்பினராக இருப்பதால் அவரை விசாரிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டது.

ஆனால் இது குறித்து உச்ச நீதிமன்றத்தை அணுக சிபிஐ முடிவு செய்ததையடுத்து குப்தாவை விசாரிக்க மத்திய அரசு கடந்த 11ம் தேதி அனுமதி அளித்தது. முன்னதாக கடந்த 10ம் தேதி குப்தா போட்டி ஆணையத்தின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் நிலக்கரி ஊழல் தொடர்பாக குப்தாவிடம் விசாரணை நடத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+