திமுக மகளிர் தொண்டர் அணி செயலாளர் காரல் மார்க்ஸ் கைது.. குஷ்புவை முன்பு திட்டியவர்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: திமுக மகளிர் தொண்டர் அணி மாநிலச் செயலாளர் காரல் மார்க்ஸ் அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் முன்பு நடிகை குஷ்புவைத் திட்டியவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் காரல் மார்க்ஸ். 63 வயதான இவர் மாநில மகளிர் தொண்டர் அணிச் செயலாளராக இருக்கிறார்.

சமீபத்தில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமைக் கழக பேச்சாளர்கள் கூட்டம் நடந்தது. அப்போது காரல் மார்க்ஸ் முதல்வர் ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்துப் பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கறிஞர் ஒருவர் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த கோர்ட், காரல் மார்க்ஸை கைது செய்ய உத்தரவிட்டது.

அதன்படி தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் காரல் மார்க்ஸை தஞ்சை சென்று கைது செய்தனர்.

முன்பு மு.க.ஸ்டாலின் குறித்து நடிகை குஷ்பு கொடுத்த பேட்டியால் திமுகவில் பெரும் பிரளயம் ஏற்பட்டது. அப்போது குஷ்புவை நேருக்கு நேராக காரல்மார்க்ஸ் திட்டினார் என்று பரபரப்பு ஏற்பட்டது என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் அவர் முதல்வரை அவதூறாகப் பேசிய வழக்கில் கைதாகியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+