தம்பி.. அடிடா தந்தி...!
சென்னை: போய் வா தந்தியே என்று சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. அதாவது பலரது இறப்புச் செய்திகளையும், அவசரச் செய்திகளையும் கொடுத்து உதவி வந்த தந்திக்கு அந்திமக் காலம் வந்து விட்டது.
160 வருடமாக தத்தித் தத்தித் தாவி வந்த தந்தி ஜூலை 15ம் தேதியுடன் தனது மூச்சை நிறுத்துகிறது.
மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றது இந்த தந்தி.. எத்தனையோ விஷயங்களை மனித குலம் கண்டிருந்தாலும் இந்தத் தந்திக்கும் அதில் நீங்காத இடம் உண்டு.
தந்தியும், மக்களும் பிரிக்க முடியாது என்பது போல இந்த அரசியல்வாதிகளுக்கும் தந்தி ரொம்ப வேண்டிய தோஸ்த்தாக இருந்தது.

திமுகவினரின் உடன் பிறப்பு
திமுகவுக்கும் தந்திக்கும் இடையிலான பாசப் பிணைப்பு.. சொல்லில் அடங்காதது.. சொன்னாலும் புரியாதது... வாய் புளித்ததோ, மாங்காய் வெடித்ததோ.. பாத்தீங்களா.. அரசியல் பத்தி எழுதினாலே வாய் எப்படி போகுது பாருங்க நமக்கு... தந்தியானது திமுகவினரின் உடன் பிறப்பு போல என்றுதான் சொல்ல வந்தோம்.

தம்பி.. அடிடா தந்தி...
திமுகவினரிடம் அடி வாங்கி வாங்கி இளைத்துப் போய் விட்டது தந்தி என்று கூறலாம். காரணம், திமுகவினர்தான் அடிக்கடி தந்தி அடிப்பார்கள். தலைவர் திடீரென அறிவிப்பார்.. தம்பி டெல்லிக்கு அடி தந்தி என்று.. உடனே டெலிகிராப் ஆபீஸ் பக்கம் கரைவேட்டி கூட்டம் கரைபுரண்டோடும்.. அரசுக்கும் நாலு காசு கிடைக்கும்.

பாவம் பிரதமர்...
திமுகவினர் பெரும்பாலும் பிரதமருக்குத்தான் அடிக்கடி தந்தி அடித்து டென்ஷன் கொடுத்தவர்கள் என்று சொல்லலாம். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் தந்தி அடித்து விடுவார்கள். பிரதமர் அலுவலகத்தில் தபால்களைப் பெறும் அலுவலகம் போல தந்திகளைப் பெறவும் தனி பிராஞ்ச் போடும் அளவுக்கு தந்திகள் பறந்த காலம் .. அது ஒரு கிராப் காலம்

இனி எப்படி அடிப்பீங்க....
அப்படியாப்பட்ட தந்தியை இப்போது நிறுத்தப் போகிறார்கள் என்ற செய்தி, யாருக்கு எப்படி இருக்கிறதோ இல்லையோ நிச்சயம் திமுகவினர் போன்ற அரசியல்வாதிகளுக்கு பெரிய கஷ்டமான செய்திதான்...

எஸ்.எம்.எஸ்.அனுப்புவோம்ல...
ஒருவேளை தந்தியை விட படு வேகமாகப் போகும் எஸ்.எம்.எஸ்களைக் கையில் எடுப்பார்கள் என்று நம்பலாம்.. பட்டென்று செல்லை எடுத்து... start immediately. polls come. seat give. otherwise bye bye. LOL என்று தட்டி விட்டு தட்டாமாலை சுற்றுவார்கள் என்று நம்பலாம்.

கடைசி ஸ்லைடரில் கொஞ்சம் சீரியஸ் மெசேஜ்...
உண்மையில் தந்தியை நிறுத்தும் எண்ணம் அரசுக்கு இருக்காதுதான். காரணம் அதன் புராதாணம், பாரம்பரியம். ஆனால் தந்தி கொடுக்க ஆளே இல்லை, இதனால் வருவாயும் இல்லை.. அதனால்தான் அதை நிறுத்துகிறார்கள்..
கஷ்டமாத்தான் இருக்கு.. தந்தியை நிறுத்துவதை நினைத்து அல்ல. கட்சித் தலைவர்கள் படப் போகும் கஷ்டத்தை நினைத்து.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியானது.. சின்னதுரைக்கு மீண்டும் வாய்ப்பு! -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்! -
ஸ்டாலின் 6.. கனிமொழி கையில் எடுத்த மேஜிக்.. தேர்தல் போக்கையே மாற்றும் அந்த 6 வாக்குறுதிகள்? -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு












Click it and Unblock the Notifications