என்.எல்.சி.யின் 5% பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Subscribe to Oneindia Tamil

மத்திய அரசு பொதுத்துறை பங்குகளை விற்று நிதி திரட்ட முடிவு செய்தது. இதனடிப்படையில் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 93.55% பங்குகள் உள்ளன. இதில் 10% பங்குகளை விற்றே ஆக வேண்டும் என்பது மத்திய அரசின் திட்டம். ஆனால் தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் நேற்று பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகார கமிட்டி கூட்டத்தில் என்.எல்.சி.யின் 5% பங்குகளை விற்க ஒப்புதல் வழங்கப்பட்டது. என்.எல்.சி. பங்கு விற்பனை மூலம் ரூ.466 கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி 7.8 கோடி பங்குகள் விற்கப்படுகிறது.
மேலும் இக் கூட்டத்தில் இயற்கை எரிவாயு விலையை உயர்த்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அத் திட்டம் கைவிடப்பட்டது.












Click it and Unblock the Notifications