5 வயது சிறுமி கற்பழித்து கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்தது கோர்ட்
தானே: மகாராஷ்டிர மாநிலம் தானேயில் ஐந்து வயது சிறுமியை கற்பழித்து கழுத்தை நெரித்துக் கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தானே மாவட்டம் பிவண்டியில், பவர்லூம் டவுன் பகுதியை சேர்ந்த காலிப் அஸ்ரப் முகமது, அங்குள்ள விசைத்தறி தொழிற்சாலையில் ஒன்றில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி தொழிற்சாலை அருகே விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியை, ஏமாற்றி அழைத்துச் சென்று, கற்பழித்தார் காலிப்.
உயிரோடு விட்டால், வெளியே உண்மையை சொல்லி விடுவாள் என அஞ்சிய காலிப் அந்த சிறுமியைக் கழுத்தை நெரித்துக் கொன்றார். போலீசாரின் தீவிர விசாரணையில், காலிப் குற்றவாளி என்பது நிரூபணமானது.
சிறுமி கற்பழிப்பு வழக்கு விசாரணை தானே மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி கே.ஆர்.வாரியர் முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவில் காலிப் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால் அவனுக்கு மரணா தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications