உத்தரகாண்ட் வெள்ள பாதிப்பு - இதுவரை 80,000 பேர் மீட்பு
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் சிக்கித் தவித்தவர்களில் இதுவரை 80,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பல ஆயிரம் பேர் சிக்கியிருக்கின்றனர்.அவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்கின்றன.
சட்டி என்ற வனப்பகுதியில், சிக்கியிருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் யாராவது அங்கு மாட்டியுள்ளனரா என்று தேடுதல் பணிகள் நடந்து வருகின்றன.

உத்தரகாண்ட் முழுவதும் இதுவரை 80,000 பேர்வரை மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை வரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளதால் மீட்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
ஹர்சி, மனேரி, உத்தரகாசி பகுதிகளில் சிக்கியிருந்த 200 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
ஹனுமான் சட்டி என்ற பகுதியில் 700 பேர் தொடர்ந்து தவித்து வருகின்றனர். அவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க ராணுவம் முயற்சித்து வருகிறது.












Click it and Unblock the Notifications