''மாமனாரின் இன்பவெறி''... அரிவாளை எடுத்து கையை வெட்டித் தள்ளிய மருமகள்கள்!
பாட்னா: தங்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த மாமனாரை, 2 பெண்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டி கையைத் துண்டித்து விட்டனர்.
பீகார் மாநிலம் ரோத்தாஸ் மாவட்டம், பானாஸ் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த ஊரைச் சேர்ந்தவர் ராதேஷியாம் சிங். இவர் தனது இரு மருமகள்களிடமும் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மாமனாராச்சே என்று அந்த இரு பெண்களும் இதை சகித்துக் கொண்டு பொறுமை காத்து வந்தனர்.
ஆனால் சிங்கின் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே ஆவேசமடைந்த இரு பெண்களும், அரிவாளை எடுத்து சரிமாரியாக சிங்கின் கையை வெட்டினர். இதில் இரு கைகளும் கை தனியாக வந்து விட்டது. ரத்த வெள்ளத்தில் துடித்தார் சிங்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் சிங்கை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரு மருமகள்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மருமகள்களில் ஒருவர் அளித்த வாக்குமூலத்தில் தினசரி எங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தார் எங்களது மாமனார். சில தினங்களுக்கு முன்பு நான் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தபோது பின்னாலிருந்து கட்டிப்பிடித்து சில்மிஷம் செய்தார். இதைப் பார்த்து நாங்கள் இருவரும் கூச்சலிட்டோம். ஆனால் அதுகுறித்து அவர் கவலைப்படவில்லை. மாறாக இருவரிடமும் சேட்டை செய்தார். இதனால்தான் கையை வெட்டி விட்டோம் என்றார்.
மருமகள்கள் போட்ட போட்டில் சிங்கின் இரண்டு கைகளும் துண்டாகிப் போய் விட்டன. அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications