சுரேஷை காதலித்து திருமணம் செய்த சுதா... கோவிலுக்குள் நுழைய விடாமல் ஜாதி வெறியர்கள் ரகளை!
தர்மபுரி: தர்மபுரி அருகே ஜாதி விட்டு காதல் திருமணம் செய்த பெண்ணை, கோவிலுக்குள் வரக் கூடாது என்று கூறி ஜாதி வெறியர்கள் ரகளை செய்தனர். இதுகுறித்து அவர் போலீஸில் புகார் கொடுக்கவே போலீஸார் 22 பேரைக் கைது செய்தனர்.
கலப்புத் திருமணங்களை ஏற்க மனம் இல்லாத 'மகா மனிதர்கள்' நாட்டில் நிறையவே உள்ளனர். இவர்களால் பல காதல் மணம் புரிந்த தம்பதிகள் வேதனையில் சிக்குண்டு வாழும் நிலை இன்னும் நீடிக்கிறது.
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள வேப்பமரத்து கொட்டாய் சேர்ந்தவர் சுரேஷ். இவர் வேறு ஜாதியைச் சேர்ந்த சேர்ந்த சுதா என்பவரை காதலித்தார். இரு வீட்டார் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தார். தனது ஊரிலேயே வசிக்கத் தொடங்கினார்.
இந்த நிலையில் சுதா அந்த ஊரில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிடப் போனார். ஆனால் அவர் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்று அறிந்த அப்பகுதியினர் சுதாவைக் கோவிலுக்குள் போகக் கூடாது என்று கூறித் தடுத்து ரகளை செய்தனர்.
இதுகுறித்து போலீஸில் புகார் போனது. போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் ஊர் கவுண்டர் என்று கூறப்படும் மாரியப்பன் உள்பட 22 பேரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications