நெல்லையில் போலி நகை கொடுத்து மோசடி-3 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை நகை கடையில் போலி நகைகளை கொடுத்து மோசடி செய்த உததிரபிரதேச தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை டவுனில் உள்ள பிரபல நகை கடைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உததிரபிரதேசத்தை சேர்ந்த பிரேந்தர், அவரது மனைவி கமலா ஆகியோர் நகை எடுப்பதற்காக சென்றனர். அப்போது தாங்கள் வைத்திருந்த 10 பவுன் எடையுள்ள பழைய நகைகளை கொடுத்து அவற்றுக்கு பதில் புதிய நகை வேண்டும் என்று கூறினர்.

வளையல்களின் தரத்தை பார்த்தபோது 82 டச் இருந்துள்ளது. அவற்றுக்கு பதில் 5 பவுனுக்கு புதிய நகைகள வாங்கி சென்றனர். அவர்கள் கொடுத்த வளையல்களை கடை ஊழியர்கள் உருக்கி பார்த்தபோது அதன் மேல்பகுதியில் மட்டும் சுத்தமான தங்கமும், உள்பகுதியில் செம்பு கம்பி இருப்பதும் தெரிய வந்தது.

இதுகுறித்து கடை உரிமையாளர் சந்திப்பு குற்றபிரிவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் நகை கடையில் உள்ள சிசிடி கேமராவில் பதிவான அந்த தம்பதியினரை அடையாளம் பார்த்து விசாரணை நடத்தினார். இந்நிலையில் இதே போன்று அவர்கள் ரத வீதியில் உள்ள மற்றொரு கடைக்கு சென்று கொண்டிருந்த போது அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இதே போல் பல்வேறு கடைகளில் போலி் நகைகளை கொடுத்து மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இவர்களுடன் மேலும் சிலர் வந்திருப்பதாகவும், அவர்கள் கன்னியாகு்மரியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியுள்ளதாகவும் கூறினர். இதையடுத்து அங்கு சோதனை நடத்தி 40 பவுன் திருட்டு நகையை பறி்முதல் செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+