உங்க ஓட்டும் எங்களுக்கே.. அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கு விஜயகாந்த் கடிதம்

ராஜ்யசபா தேர்தலில் தேமுதிக சார்பில் ஏ.ஆர். இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரது வெற்றி பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. தேமுதிகவிடம் மொத்தம் 29 பேர் உள்ளனர். இருப்பினும்இதில் 7 பேர் அதிருப்தி எம்.எல்.ஏக்களாகி விட்டனர். இவர்கள் அதிமுகவுக்கு ஆதரவாக திரும்பியுள்ளனர்.
எனவே 22 பேரை மட்டுமே வைத்துள்ளது தேமுதிக. இக்கட்சி வெற்றி பெற 12 பேரின் ஆதரவு தேவை. இதைத் திரட்டும் முயற்சியில் அக்கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது. காங்கிரஸின் 5 பேர் ஆதரவை தேமுதிக கோரி நிற்கிறது. மேலும் அதிருப்தியாளர்கள் 7 பேரின் ஆதரவையும் தற்போது கோரியுள்ளது.
இதுதொடர்பாக அதிருப்தியாளர்கள் 7 பேருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் மூலம் கோரிககை விடுத்துள்ளார்.
தேமுதிக வேட்பாளர் இளங்கோவனுக்கு தவறாமல் ஓட்டுப்போட வேண்டும் என்று அனைத்து தேமுதிக எம்.எல்.ஏ.க்களுக்கும் விஜயகாந்த் கடிதம் எழுதி உள்ளார். இதில் 7 அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏக்களும் அடக்கம்.
அதேபோல தேமுதிக கொறடாவும் அத்தனை எம்.எல்.ஏக்ளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் ராஜ்யசபா தேர்தலில் கொறடா உத்தரவிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications