ஷரபோவா - செரீனா இடையே வெடித்தது வாய்ச்சண்டை...!
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் முன்னணி வீராங்கனைகளான மரியா ஷரபோவாவுக்கும், செரீனா வில்லியம்ஸுக்கும் இடையே கடும் வாய்ச்சண்டை வெடித்துள்ளது.
செரீனாவை மிகக் கடுமையாக திட்டித் தீர்த்துள்ளார் செரீனா வில்லியம்ஸ். ஒரு கற்பழிப்பு வழக்கு குறித்து செரீனா தெரிவித்த கருத்துக்களுக்காக அவரை விமர்சித்துள்ள மரியா, செரீனாவின் தனிப்பட்ட வாழ்க்கையையும் கடுமையாக நக்கலடித்துள்ளார்.
உலகின் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். இவருக்கும், மரியாவுக்கும் இடையே அவ்வப்போது ஏதாவது சின்னச் சின்ன சண்டை மூள்வது வழக்கம். இந்த நிலையில் செரீனா மீது பாய்ந்துள்ளார் மரியா.

கற்பழிப்பு குறித்த செரீனாவின் கருத்து
அமெரிக்காவில் 2 பள்ளிக்கூட மாணவர்களால், 16 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டது குறித்து செரீனா வில்லியம்ஸ் ஒரு கருத்தைக் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பின்னர் இதற்காக மன்னிப்பு கேட்டார் செரீனா.

மோசமான கருத்து - மரியா கோபம்
இந்த விவகாரம் குறித்து மரியா ஷரபோவா கூறுகையில், செரீனா சொன்ன கருத்து மிகவும் மோசமானது. இதை நான் எதிர்பார்க்கவில்லை.

தன் முதுகை முதலில் பார்க்கட்டும் செரீனா
செரீனா வில்லியம்ஸ் தனது சாதனைகளை முதலில் பார்க்கட்டும், அதுகுறித்துப் பேசட்டும். அடுத்தவர்கள் குறித்து வாய்த் துடுக்காக பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார் மரியா.

என் பாய் பிரண்ட் யாரா இருந்தா உனக்கென்ன
அதேபோல தன் பாய் பிரண்ட் பல்கேரிய வீரர் கிரிகர் டிமிட்ரோவ் குறித்து செரீனா தெரிவித்த கருத்துக்களுக்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மற்றவர்களின் பாய் பிரண்ட் குறித்து கருத்துச் சொல்ல செரீனாவுக்கு உரிமை இல்லை. அவரது பாய் பிரண்ட் குறித்துப் பேசட்டும்.. அவர் தனது மனைவியை விவாகரத்து செய்வதைக் குறித்துப் பேசட்டும். அவருக்கு குழந்தைகள் இருப்பது குறித்துப் பேசட்டும்...
இவங்க சண்டை எங்கு போய் முடியும்னு தெரியலையே...!












Click it and Unblock the Notifications