முன்னாள் டிஜிபி லத்திகா சரணின் ஹேண்ட் பேக்கை சுட்டுட்டாங்க....!

Subscribe to Oneindia Tamil

கோவை: முன்னாள் டிஜிபி லத்திகா சரணின் கைப்பையை கோவை ரயில் நிலையத்தில் திருடி விட்டார்கள். இதுகுறித்து லத்திகா ரயில்வே போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

லத்திகா சரண் தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி என்ற பெருமைக்குரியவர். கடந்த காலத்தில் அதிமுக மற்றும் திமுக அரசுகளிடம் சிக்கி படாதபாடு பட்டவர்.

நேர்மையான, கண்ணியமான அதிகாரி என்று பெயர் பெற்றவர் லத்திகா சரண். தற்போது ஓய்வு பெற்று விட்டார்.

சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில்

சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில்

லத்திகா சரண் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இன்று காலை கோவை வந்தார்.

கைப்பை திருட்டு

கைப்பை திருட்டு

ரயில் நிலையத்தில் வந்து இறங்கியபோது அவர் வைத்திருந்த கைப்பையைக் காணாமல் திடுக்கிட்டார்.

ரூ. 4000, 2 டெபிட் கார்டுகள்

ரூ. 4000, 2 டெபிட் கார்டுகள்

அந்தக் கைப்பையில் லத்திகா, ரூ. 4,200 பணமும், 2 டெபிட் கார்டுகளும் வைத்திருந்தாராம்.

ரயில்வே போலீஸில் புகார்

ரயில்வே போலீஸில் புகார்

உடனடியாக ரயில்நிலையத்தில் உள்ள ரயில்வே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் லத்திகா சரண்.

முன்னாள் டிஜிபியிடமே கைப்பை திருடப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த போலீஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+