ராஜ்யசபா தேர்தலில் ஓட்டுப்போட 6 தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்களுக்கு ஹைகோர்ட் அனுமதி

கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தே.மு.தி.க அதிருப்தி எம்.எல்.ஏ மைக்கல் ராயப்பனை தாக்கியதாக கூறி தே.மு.தி.க கொறடா வி.சி. சந்திர குமார், பார்த்த சாரதி, முருகேசன், நல்லத்தம்பி, செந்தில் குமார், அருட்ச்செல்வன் ஆகிய தே.மு.தி.க எம்.எல்.ஏ க்கள் 6 பேர் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி ஓர் ஆண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர் பின்னர் அது ஆறு மாத காலமாக குறைக்கப்பட்டது. எம்.எல்.ஏ க்கள் 6 பேரும் ஆறு மாத காலத்துக்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கான எந்த சலுகைகளையும் ஊதியத்தையும் பெற முடியாது என்றும் சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து 6 பெரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, 6 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்தார்.
இந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலில் தே.மு.தி.க போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் எங்கே வாக்களிக்க முடியாமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில், ராஜ்யசபா தேர்தலில் தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் வாக்களிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications