தமிழீழ மாணவர் எழுச்சி நாள்: இனப்படுகொலையை தடுக்கக் கோரி லண்டனில் பேரணி
லண்டன்: இலங்கையில் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசால் நடத்தப்பட்டு வரும் இனப் படுகொலையை தடுக்கக் கோரி லண்டனில் மாணவர்கள ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு ஒருங்கிணைப்பில் ஜூன் 23 ஆம் தேதி ஞாயிறன்று அன்று பொன் சிவகுமாரன் 39 ஆவது நினைவு நாளையொட்டி இங்கிலாந்து பிரதமரின் இல்லத்திற்கு வெளியில் நிகழ்வஞ்சலி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்களும் மக்களும் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் முழக்கம்
ஈழ மக்கள் இனப்படுகொலை பற்றிய சர்வதேச விசாரணை நடத்தவேண்டும் என்ற பதாதைகளை ஏந்தியிருந்த மாணவர்கள், தமிழர் வாழ் இடங்களில் இடம்பெறும் சிங்கள குடியிருப்பு பற்றியும் தமிழர் நில அபகரிப்புப் பற்றியும் முழக்கமிட்டனர்.

சார்க் மாநாட்டை புறக்கணிக்க
பிரித்தானிய பிரதமர் மற்றும் பிரித்தானிய இளவரசர் அவர்களும் இலங்கையில் நடக்கவிருக்கும் மாநாட்டை புறக்கணிக்குமாறும் வலியுறுத்தினார் . பிரித்தானியாவிலுள்ள 10 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களிலும் இருந்து மாணவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

நடனத்துடன் போராட்டம்
பிரசித்தி பெற்ற சுற்றுலா பயணிகள் கூடுதலாக காணப்படும் இடமான Piccadly Circus இல் மாணவர்கள் பலர் சேர்ந்து மேற்கத்தைய நடனத்துடன் சார்ந்த பாணியில் திடிரென்று வேற்றினமக்கள் முன்னால் தோன்றி நடனமொன்றை இடம்பெற செய்து அதன்மூலமாக ஈழப்பிரச்சனையை பற்றிய விழிப்புணர்வை பரப்பினர்.

ஈழம் பற்றி துண்டு பிரசுரம்
அவர்களின் நடன நிகழ்வை ஒட்டி மற்றும் சில மாணவர்கள் சுற்றியுள்ள சுற்றுலா பயணிகளிற்கும் மற்றும் வேற்று இன மக்களிற்க்கும் ஈழப் பிரச்சனையைப் பற்றிய துண்டு பிரசுரங்களை அளித்தனர்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
ஆர்பாட்டத்தின் போது தமிழ் இளையோர் அமைப்பால் முன்வைக்கப் பட்ட மூன்று அம்சக் கோரிக்கைகளை அடங்கிய மனுவும், சிறுவர்களின் கைப்பட உருவாகிய மனுக்களும் பிரதமர் மாளிகையில் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" என்ற வீர வசனத்துடன் ஆர்பாட்டம் நிறைவு பெற்றது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications