இனி பாக்கெட்டில் கிடைக்கும் திருப்பதி லட்டு!

திருப்பதி ஏழுலையான் கோவிலில் லட்டு பிரசாதம் மிகவும் பிரசித்தமானது. சுவாமி தரிசனத்திற்கு கால்கடுக்க நிற்பது போல லட்டு பிரசாதம் வாங்கவும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து இருப்பது உண்டு.
சுவையும், மணமும் கொண்ட லட்டு பிரசாதம் முழுதாக கிடைப்பதில்லை என்பது பக்தர்களின் குறை. லட்டு எடை குறைவதாக பக்தர்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் தேவஸ்தானத்துக்கு வந்தது.
இந்த புகாரை களைய காற்றுப்புகாத பாலுதீன் பாக்கெட்டுகளில் லட்டுவை அடைத்து விற்க தேவஸ்தானம் திட்டமிட்டு உள்ளது.
காற்று புகாத பாக்கெட்டுகளில் அடைப்பதன் மூலம் லட்டு நீண்ட நாள் கெட்டு போகாமல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. பெங்களூர் நிறுவனம் ஒன்று இதனை பரிட்சார்த்த முறையில் ஆய்வு செய்து வருகிறது.
ஆய்வு முடிவு கிடைத்ததும் பாக்கெட்டுகளில் அடைத்து லட்டு வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்படும் என்று தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாச ராஜு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications