ராஜ்யசபா தேர்தலில் திமுக ஆதரிக்கக் கூடாது..: சோனியா, ராகுலுக்கு ‘தூபம்’ போட்டாரா ப.சிதம்பரம்?!

ராஜ்யசபா தேர்தலில் திமுக, தேமுதிக இரண்டுமே காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கோரி இருக்கின்றன. ஆனால் காங்கிரஸ் கட்சியோ இன்னமும் முடிவை அறிவிக்காமல் இருக்கிறது.
காங்கிரஸ் கட்சி முதலில் திமுகவைத்தான் ஆதரிப்பதாக வலிய வந்து கூறியிருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளின் போது கனிமொழியிடம் பேசிய காங்கிரஸின் மூத்த தலைவர் அகமது படேல், நீங்கள் நிற்பதாக இருந்தால் உங்களுக்கு ஆதரவு தருகிறோம் என சோனியா சொல்லிவிட்டார்.. இதை அப்பாவிடமும் சொல்லிவிடுங்கள் என்று கூறியிருக்கிறார். கனிமொழியோ பிடிகொடுக்காமல் அப்பாவிடம் சொல்லிவிடுகிறேன் என்று கூறியிருக்கிறார். காரணம் அப்போது தேமுதிக, அல்லது மார்க்சிஸ்ட் ஆதரவு தங்களுக்குக் கிடைத்துவிடும் என்ற திமுகவின் நம்பிக்கைதான்..
ஆனால் கடைசியில் எல்லாமே தலைகீழாக மாறிப் போக தேமுதிகவும், திமுகவும் நேருக்கு நேர் மோத வேண்டிய நிலைமை. சென்னையில் தேமுதிக எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனிடம் நேரில் சென்று ஆதரவு கேட்டிருக்கின்றனர். அதன் பின்னர் டெல்லியில் திமுகவின் டி.ஆர். பாலு, காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறார். அப்போதுதான் டி.ஆர். பாலுவோ, திமுகவின் தயவு காங்கிரஸுக்கு தேவை என்ற தொனியில் பேச சோனியாவோ, அகமது படேல் மூலமாகவும் ஜெயந்தி நடராஜன் மூலமாகவும் ஆதரவு தருகிறோம் என்று சொன்னோம். அப்போதெல்லாம் நீங்கள் ஏன் பதிலே சொல்லலை என்று எகிறும் போக்கில் பேச பாலு அமைதியாகி இருந்திருக்கிறார்.
இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்ட நிதியமைச்சர் ப.சிதம்பரம், திமுகவை எப்போதும் மிரட்டியபடியே வைத்திருக்க வேண்டுமெனில் தேமுதிக இத்தேர்தலில் காங்கிரஸ் ஆதரிக்க வேண்டும் என்று சோனியாவிடமும் ராகுல் காந்தியிடம் தூபம் போட்டிருக்கிறார் என்கிறார்கள்.
அதே நேரத்தில் ஜெயந்தி நடராஜன் மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோர் திமுகவை ஆதரிக்கலாமே என்று கூறுவதாகவும் தெரிகிறது.
இதனால் சிதம்பரம் மீது செம கடுப்பில் இருக்கிறது திமுக.












Click it and Unblock the Notifications