குதிரை பேரம்... ராஜ்யசபா தேர்தல் முடிவுக்கு தடை கோரிய மனு ஹைகோர்ட்டில் தள்ளுபடி!

தமிழ்நாட்டில் ஜூன் 27ம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. 6 இடங்களுக்கு 7 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சி வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தேமுதிக, திமுக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
இந் நிலையில் சத்யாலயா ராமகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், வரும் 27ம் தேதி நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் தமிழகத்தில் இருந்து 6 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்தலில் 5 பேரை வெற்றி பெறச் செய்வதற்கான பலம் அதிமுக அணிக்கு உள்ளது. அந்த அணியின் சார்பில் 4 பேரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதுபோக 6வது இடத்துக்கான உறுப்பினரை தேர்வு செய்ய திமுக, தேமுதிக ஆகிய இரண்டு கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
திமுகவுக்கு 23 உறுப்பினர்களும், தேமுதிகவுக்கு 29 உறுப்பினர்களும் பேரவையில் உள்ளனர். இதில் தேமுதிக உறுப்பினர்கள் 7 பேர் கட்சியின் மீது அதிருப்தியில் உள்ளனர்.
மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் 34 வாக்குகள் தேவை. எனவே இந்த எண்ணிக்கையை எட்டுவதற்காக சிறிய கட்சிகளின் உறுப்பினர்களை விலை பேசி வாங்கும் குதிரை பேர நடவடிக்கைகளில் திமுக மற்றும் தேமுதிக ஆகிய இரண்டு கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.
ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டிய தேர்தலை இவ்வாறு குதிரை பேர வியாபாரமாக்கி அதன் மூலம் தேர்தல் வெற்றியை நிர்ணயம் செய்வது அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது. எனவே நடைபெற உள்ள தேர்தலில், தேர்தல் நடைபெற்றாலும் கூட தேர்தல் முடிவை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். அதன்பிறகு உயர் நீதிமன்றம் இது குறித்து விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, இன்று தலைமை நீதிபதி ஆர்கே. அகர்வால், எம். சத்யநாராயணன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதால், இந்த தேர்தல் நடவடிக்கையில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications