குதிரை பேரம்... ராஜ்யசபா தேர்தல் முடிவுக்கு தடை கோரிய மனு ஹைகோர்ட்டில் தள்ளுபடி!

தமிழ்நாட்டில் ஜூன் 27ம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. 6 இடங்களுக்கு 7 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சி வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தேமுதிக, திமுக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
இந் நிலையில் சத்யாலயா ராமகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், வரும் 27ம் தேதி நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் தமிழகத்தில் இருந்து 6 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்தலில் 5 பேரை வெற்றி பெறச் செய்வதற்கான பலம் அதிமுக அணிக்கு உள்ளது. அந்த அணியின் சார்பில் 4 பேரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதுபோக 6வது இடத்துக்கான உறுப்பினரை தேர்வு செய்ய திமுக, தேமுதிக ஆகிய இரண்டு கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
திமுகவுக்கு 23 உறுப்பினர்களும், தேமுதிகவுக்கு 29 உறுப்பினர்களும் பேரவையில் உள்ளனர். இதில் தேமுதிக உறுப்பினர்கள் 7 பேர் கட்சியின் மீது அதிருப்தியில் உள்ளனர்.
மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் 34 வாக்குகள் தேவை. எனவே இந்த எண்ணிக்கையை எட்டுவதற்காக சிறிய கட்சிகளின் உறுப்பினர்களை விலை பேசி வாங்கும் குதிரை பேர நடவடிக்கைகளில் திமுக மற்றும் தேமுதிக ஆகிய இரண்டு கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.
ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டிய தேர்தலை இவ்வாறு குதிரை பேர வியாபாரமாக்கி அதன் மூலம் தேர்தல் வெற்றியை நிர்ணயம் செய்வது அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது. எனவே நடைபெற உள்ள தேர்தலில், தேர்தல் நடைபெற்றாலும் கூட தேர்தல் முடிவை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். அதன்பிறகு உயர் நீதிமன்றம் இது குறித்து விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, இன்று தலைமை நீதிபதி ஆர்கே. அகர்வால், எம். சத்யநாராயணன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதால், இந்த தேர்தல் நடவடிக்கையில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங்












Click it and Unblock the Notifications