அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை; அது வெறும் தொகுதி உடன்பாடு தான்: டாக்டர் கிருஷ்ணசாமி

திருச்சியில் நிருபர்களிடம் பேசிய அவர், 5 முறை முதல்வராக இருந்த மூத்த அரசியல்வாதியான திமுக தலைவர் கருணாநிதி என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ராஜ்யசபா தேர்தலில் கனிமொழிக்கு ஆதரவு கேட்டார்.
எனவேதான் திமுக.வை ஆதரிக்கும் முடிவுக்கு வந்தோம். மேலும், அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்களின் ஆதரவுடன் அந்தக் கட்சிகளின் 5 வேட்பாளர்களும் வென்றுவிடுவார் என்பதால், எங்கள் வாக்குகள் வீணாகக் கூடாது என்று முடிவு செய்தோம்.
மேலும் அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் வெற்றிக்குத் தேவையான வாக்குகளைக் காட்டிலும் அதிகம் உள்ளதால், எங்கள் வாக்குகள் வீணாகாமல் இருக்க திமுகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்தோம். கனிமொழி எப்படியும் வெற்றி பெற்றுவிடுவார் என்றார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு இப்போது எதிர்த் தரப்புக்கு ஆதரவு தருவது சரியா என்று நிருபர்கள் கேட்டதற்கு, ஆட்சியில் பங்கு கொண்டால்தான் அது கூட்டணி. நாங்கள் ஆட்சியில் பங்கு பெறவில்லை. மேலும், நாங்கள் வைத்தது கூட்டணி அல்ல, வெறும் தொகுதி உடன்பாடு செய்து கொண்டவர்கள் மட்டுமே என்றார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications