இந்தியாவின் முதல் ‘நேவிகேஷன்’ செயற்கைகோள்: ஜூலை 1ல் விண்ணில் பாய்கிறது
பெங்களூர்: வரும் ஜூலை 1 ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் வழி செல்லும் தகவல் அறிய உதவும் நேவிகேஷன் செயற்கைக்கோள் ஏவப்பட இருக்கிறது.
ஏற்கனவே, இந்த மாதம் 12ம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஏ என பெயரிடப்பட்டுள்ள இந்த நேவிகேஷன் செயற்கைக் கோள் விண்ணில் ஏவ தயார் செய்யப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் சில தொழில்நுட்ப கோளாறுகள் கண்டறியப்பட்டதால் அம்முயற்சி ஒத்தி வைக்கப் பட்டது.
தற்போது அனைத்து தொழில்நுட்ப கோளாறுகளும் சரி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் விண்ணில் பாய தயாராக இருகிறது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஏ.

முதல் நேவிகேஷன் செயற்கைக்கோள்...
இந்தியாவின் ம் உதல் நேவிகேஷன் செயற்கைக்கோள் என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்த செயற்கைக்கோள், சுமார் 1425 கிலோ எடை கொண்டது.

துல்லியமானது....
இது இந்திய எல்லைக்குட்பட்ட ஆயிரத்து ஐநூறு கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட தரைப்பகுதிகளை துல்லியமாக 'நேவிகேஷன்' முறையின்படி இது வழி செலுத்தும் திறன் கொண்டது.

பத்து வருஷம் சுத்தி.. சுத்தி வருமாம்....
சுமார் பத்து ஆண்டுகள் விண்வெளியில் சுற்றிவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த செயற்கைக்கோள்.

விரைவில் கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்...
தற்போது இந்த செயற்கைக் கோளை விண்ணில் ஏவுவதற்கான 72 மணி நேர 'கவுண்ட் டவுன்' தொடங்கும் முன்னேற்பாடுகளில் உள்ளனர் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஐ.எஸ்.ஆர்.ஓ. விஞ்ஞானிகள்.












Click it and Unblock the Notifications