தைரியம் இருந்தால் தொட்டுப் பாருங்கள்... மாவோயிஸ்டுகளுக்கு சவால் விடுக்கும் மமதா பானர்ஜி!
Subscribe to Oneindia Tamil

மேற்கு வங்க மாநிலம் கோபிபல்லாப்பூரில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பிரசார பொதுக்கூடத்தில் மமதா பானர்ஜி பேசுகையில், நான் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த ஜங்கிள் மகாலுக்கு செல்ல முயன்றேன். ஆனால் அங்கு போனால் மாவோயிஸ்டுகள் என்னைக் கொல்லப் போவதாக எச்சரித்தனர். நான் மாவோயிஸ்டுகளுக்கு சவால்விட்டு சொல்கிறேன்..
உங்களுக்குத் தைரியம் இருந்தால் என்னைத் தொட்டுப் பாருங்கள்... எந்த இடத்தில் நீங்கள் என்னை கொல்ல விரும்புகிறீர்கள்? நான் அங்கேயே தைரியமாக வருகிறேன்..துப்பாக்கி முனையிலா என்னை அச்சுறுத்த முனைகின்றீர்கள்? 34 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட்களின் துப்பாக்கி முனைகளுக்கு எதிராக போராடுகிறேன் நான்... ஜங்கிள் மகாலில் மாவோயிஸ்டுகளுடன் மார்க்சிஸ்ட்டுகள் கை கோர்க்க சதித்திட்டம் தீட்டுகின்றனர். இதை எனது அரசு அனுமதிக்காது என்றார்.












Click it and Unblock the Notifications