For Daily Alerts
Just In
எங்களது சடலங்கள் மீதுதான் 370வது பிரிவு ரத்து நிறைவேறும்: ஒமர் அப்துல்லா எச்சரிக்கை!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது அரசியல் சட்டப் பிரிவு நீக்கம் என்பது எங்களது சடலங்களின் மீதுதான் நடைபெறும் என்று அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா எச்சரித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்பது பாஜகவின் தொடர்ச்சியான குரலாக இருந்து வருகிறது. அண்மையில் பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோரும் இதை வலியுறுத்தியிருந்தனர்.
இதற்கு பதிலளித்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, தேர்தல் காலங்களில் இதுபோன்ற கோரிக்கைகளை பாஜக முன் வைப்பது வழக்கமான ஒன்றுதான். பாஜகவின் இதுபோன்ற பிரித்தாளும் சூழ்ச்சி ஒரு போதும் நிறைவேறாது. 370 சட்டப்பிரிவை ரத்து செய்வது என்பது நாங்கள் மரணித்த பின் எங்களது சடலங்களின் மீதுதான் நடைபெறும் என்றார்.
Comments
English summary
Jammu and Kashmir Chief Minister Omar Abdullah on Wednesday castigated Bharatiya Janata Party (BJP) leaders for raising the “false bogey” of revocation of Article 370 of the Constitution which provided special status to the state.
Story first published: Thursday, June 27, 2013, 16:36 [IST]