உத்தரகண்ட் சென்ற உறவினரை காணவில்லையா?: கூகுள் சாப்ட்வேர் மூலம் தேடலாம்
சென்னை: உத்தரகண்ட் வெள்ளத்தில் சிக்கி பலியானோர், காணாமல் போனவர்களின் விவரம் அறிய கூகுள் உதவி செய்கிறது.
உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி ஏராளமானோர் பலியாகியுள்ளனர். மேலும் ஆங்காங்கே சிக்கித் தவிப்பவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது.
உத்தர்கண்டில் உங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்கள் யாராவது காணாமல் போய்விட்டார்களா. அவர்களை நீங்கள் வீட்டில் இருந்து கொண்டே தேட கூகுள் புதிய சாப்டேர் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.
http://google.org/personfinder/2013-uttrakhand-floods/ என்ற இணையதள முகவரிக்கு சென்றால் அங்கே நான் ஒருவரை தேடுகிறேன் மற்றும் என்னிடம் ஒருவரை பற்றிய தகவல் உள்ளது என்ற இரு ஆப்ஷன்கள் வரும். நீங்கள் காணாமல் போன யாரையாவது பற்றி அறிய விரும்பினால் 'I am looking for someone' என்பதை கிளிக் செய்யவும். இல்லை உங்களிடம் யாரையாவது பற்றிய தகவல் இருந்தால் 'I have information about someone' என்பதை கிளிக் செய்யவும்.












Click it and Unblock the Notifications