விரைவில் சென்னையில் ‘நாய்கள் சரணாலயம்’: மேயர்
Subscribe to Oneindia Tamil

தமிழகம் முழுவதும் தெரு நாய் மற்றும் வெறி நாய் பிரச்சினை அதிகளவில் உள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இது குறித்து விவாதம் நடை பெற்றது.
விவாதத்தின் போது, காங்கிரஸ் உறுப்பினர் தமிழ்செல்வன் எழுப்பிய, நாய்கள் தொல்லை கட்டுப்படுத்தப்படுமா?' என்ற கேள்விக்கு மாநகர் மேயர் சைதை துரைசாமி பதிலளித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, ‘ சென்னையில் நாய்களைக் கட்டுப்படுத்துவதற்கு என்று ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனி நாயகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சரணாலயத்தில் நாய்களுக்கு கருத்தடை செய்யப்படும்' என்றார்.












Click it and Unblock the Notifications