For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உத்தரகண்ட் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் என்ன ஆனார்கள்?

By Siva
Google Oneindia Tamil News

விழுப்புரம்: உத்தரகண்ட் மாநிலத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 10 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை.

விழுப்புரத்தைச் சேர்ந்த பாபு என்பவர் தலைமையில் 19 பெண்கள் உள்பட 37 பேர் உத்தரகண்ட் மாநிலத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்றனர். அவர்கள் உத்தரகண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கினர். இந்நிலையில் 25 பேர் பத்திரமாக ஊர் திரும்பியுள்ளனர். விஜயா என்பவர் பசியால் உயிர் இழந்தார் என்றும், பாபுவை வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது என்றும் வந்தவர்கள் தெரிவித்தனர்.

What happened to 10 tamils stranded in Uttarakhand?

மேலும் பாபு உயிரோடிருக்க வாய்ப்பு குறைவு என்றும் அவர்கள் தெரிவித்தனர். அவர்களுடன் சென்ற கருணாமூர்த்தி, நரசிம்மன், கனகவள்ளி, வசந்தகுமாரி, கீதா, லட்சுமி, சித்தரா, ராதாபாய், ஸ்ரீலதா, உஷா ஆகிய 10 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்களை மீட்டுத் தருமாறு அவர்களின் குடும்பத்தார் மாவட்ட கலெக்டர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்தரகண்டில் இன்னும் 5,000 பேர் சிக்கித் தவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Out of the 37 TN people who went to Uttarakhand, 25 have returned safely. While one was dead and the other was washed away by the floods, 10 more are missing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X