Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராணுவத்தினருடன் 13 கிமீ நடந்தே பத்ரிநாத்தை விட்டு வெளியேறிய 500 யாத்ரீகர்கள்

Subscribe to Oneindia Tamil

Uttarakhand: Army Commander walks with 500 people out of Badrinath
பத்ரிநாத்: சில தினங்களுக்கு முன்பு மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த விமானம் விபத்துக்குள்ளாகி 20 பேர் பலியானார்கள். எனவே, மோசமான வானிலையைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்கள் 500 பேரை ராணுவத்தினர் நடத்தியே, பத்ரிநாத்தை விட்டு பத்திரமான அழைத்து வந்துள்ளனர்.

இமயமலை சுனாமியில் சிக்கியவர்களை கிட்டத்தட்ட 12 நாட்களாக விமானப்படையினரும், ராணுவத்தினரும், துணைநிலை ராணுவத்தினரும் சேர்ந்து போராடி மீட்டு வருகின்றனர். அவர்கள் இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரை ஹெலிகாப்டர்கள் மூலம் காப்பாற்றி பத்ரிநாத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் அங்கு மோசமான வானிலை நிலவுவதால், சில நாட்களுக்கு முன்பு மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியது. இதில் 20 பேர் பரிதாபமாக பலியானார்கள். மீண்டும் அத்தகைய அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு, யோசித்து நிதானமாக மீட்புப்பணியைத் தொடர்கிறார்கள் ராணுவத்தினர்.

நேற்று மீண்டும் மோசமான வானிலை நிலவியதால், சுமார் 500 பேர் ராணுவக் கமாண்டர் தலைமையில் சாலை வழியாக 43 கிலோ மீட்டர் தூரம் சென்றனர். பின்னர் சாலை வழியும் மிக மோசமாக இருந்தபடியால், அந்த குழு 13 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதை வழியாக குறுக்கே வழி நடத்தப்பட்டது. ராணுவ வீரர்களின் உதவியால், அவர்கள் பத்திரமாக ஜொஷிமாத்தில் கொண்டு சேர்க்கப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+