ராணுவத்தினருடன் 13 கிமீ நடந்தே பத்ரிநாத்தை விட்டு வெளியேறிய 500 யாத்ரீகர்கள்

இமயமலை சுனாமியில் சிக்கியவர்களை கிட்டத்தட்ட 12 நாட்களாக விமானப்படையினரும், ராணுவத்தினரும், துணைநிலை ராணுவத்தினரும் சேர்ந்து போராடி மீட்டு வருகின்றனர். அவர்கள் இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரை ஹெலிகாப்டர்கள் மூலம் காப்பாற்றி பத்ரிநாத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் அங்கு மோசமான வானிலை நிலவுவதால், சில நாட்களுக்கு முன்பு மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியது. இதில் 20 பேர் பரிதாபமாக பலியானார்கள். மீண்டும் அத்தகைய அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு, யோசித்து நிதானமாக மீட்புப்பணியைத் தொடர்கிறார்கள் ராணுவத்தினர்.
நேற்று மீண்டும் மோசமான வானிலை நிலவியதால், சுமார் 500 பேர் ராணுவக் கமாண்டர் தலைமையில் சாலை வழியாக 43 கிலோ மீட்டர் தூரம் சென்றனர். பின்னர் சாலை வழியும் மிக மோசமாக இருந்தபடியால், அந்த குழு 13 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதை வழியாக குறுக்கே வழி நடத்தப்பட்டது. ராணுவ வீரர்களின் உதவியால், அவர்கள் பத்திரமாக ஜொஷிமாத்தில் கொண்டு சேர்க்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications