லோக்சபா தேர்தலுக்குப் பின்னரே மூன்றாவது அணி: முலாயம்சிங்
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முலாயம்சிங், லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது. இதனால் பல அரசியல் கட்சிகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் அக்கட்சிகள் எழுச்சி பெறும். பொதுவாக தேர்தலுக்குப் பின்னர்தான் மூன்றாவது அணி உருவாகும். அதேபோல் லோக்சபா தேர்தலுக்குப் பின்னரே மூன்றாவது அணி பற்றி ஆலோசிக்கப்படும்.
மூன்றாவது அணி பற்றி மேற்கு வங்க முதல்வர் மமதாவுடன் இதுவரை ஆலோசனை நடத்தவில்லை. ஆனால் அவருடன் சுமூக உறவு இருந்து வருகிறது என்றார்.
இதனிடையே கொல்கத்தாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு சென்ற சமாஜவாடி கட்சி பொதுச் செயலாளர் சஞ்சய் டால்மியா, அங்கு சில மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications