என்.எல்.சி. பங்கு விற்பனையை கண்டித்து நாளை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்; ஜெ.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது: நெய்வேலி பழுப்பு நிலக்கரி மின் உற்பத்தி நிறுவனமான என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கும் பிரச்னை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 2004ஆம் ஆண்டும், 2006ஆம் ஆண்டு என்.எல்.சி.யின் 10 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு எடுத்தபோதும், எனது கண்டனத்தை தெரிவித்தேன்.
தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கும் இந்த பிரச்னைக்கு, தமிழக அரசின் எதிர்ப்பை தெரிவித்ததோடு, 5 சதவீத பங்குகளை தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனத்திற்கு விற்பனை செய்ய வேண்டும் என்றும், தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என்றும் 25ஆம் தேதி கடிதம் எழுதினேன்.
ஆனால், இது குறித்து எவ்வித சாதகமான முடிவினையும் மத்திய அரசு இதுவரை எடுக்கவில்லை. இதற்கிடையில், என்.எல்.சி.யின் விற்பனை உறுதி என்று மத்திய நிலக்கரி துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
அதேபோல், இந்த பிரச்னை குறித்து முதலில் அறிக்கை விடுத்த தி.மு.க. தலைவர்
கருணாநிதி, கனிமொழிக்கு பதவி கிடைத்ததும் நிலக்கரியை மறந்துவிட்டார். இந்தப் பிரச்சினை குறித்து சாதகமான முடிவினை மத்திய அரசு தெரிவிக்காவிட்டால், அடுத்த மாதம் 3ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக என்.எல்.சி. தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, லாபத்தில் இயங்கும் என்.எல்.சி.யின் 5 விழுக்காடு பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு செய்திருக்கும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து ஜூலை 2ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களின் மத்திய அரசு அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications