அம்மா, அமைச்சர் வைத்திலிங்கம் தப்புத் தப்பா பேசுறாரும்மா!

அதாவது புதுக்கோட்டையில் தமிழக அரசின் ஈராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் என்று ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் வைத்திலிங்கம்தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிறையப் பேசினார்.
அப்போது வைத்திலிங்கம் பேசுகையில், ஒரு மனிதனுக்கு முக்கிய தேவைகள் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், நல்ல கல்வி. இவை அனைத்தையும் தடையின்றி தருகிறார் அம்மா.
நேற்று முன்தினம், பொங்கல் பரிசாக தரும் சேலைகள் இருநூறு ரூபாய்க்கு வாங்கி தர சொல்லியிருக்கிறார். இரண்டு லட்சம் பட்டாக்கள் தரவும், இந்திரா குடியிருப்புகளுக்கு அதிக நிதியும் தந்து கொண்டிருக்கிறார். அதேபோல் கல்வியும் தந்துகொண்டிருக்கிறார்.
சுதந்திரம் அடைந்து ஐம்பதாண்டுகால வரலாற்றில் ஐம்பத்தி மூன்று கல்லூரிகளை துவக்கிய பெருமை அம்மாவையே சாரும். இப்படி சொல்லி வைத்திலிங்கம் நிறுத்தியபோது அத்தனை பேரும் டென்ஷனாகி விட்டார்கள். ஆனால் பேசியது அமைச்சராச்சே.. என்னத்தச் சொல்ல என்று தலையில் அடித்துக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications