துணிக் கடையில் டிரஸ் மாற்றியவர்களை ஓட விட்டு மிரட்டிய பெருச்சாளி..!

வேடிக்கை வினோதத்திற்காகவே இது என்று அவர்கள் கூறினாலும் இந்த அத்துமீறல் அங்கு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இவர்கள் அனுப்பிய மோட்டார் பெருச்சாளியைப் பார்த்து பல பெண்கள் அரைகுறையாகவும், நிர்வாணமாகவும் பயந்து போய் வெளியே ஓடி வந்தனர்.
பல்வேறு வகையான உடைகள், உள்ளாடைகள் உள்ளிட்டவை விற்கப்படும் கடை அது. அங்கு வந்த வாடிக்கையாளர்கள், ஆடைகளைப் போட்டுப் பார்ப்பதற்காக டிரஸ்ஸிங் ரூமுக்குப் போகும்போது வெளியிலிருந்தபடி மோட்டாரால் இயங்கும் செயற்கை பெருச்சாளியை உள்ளே விட்டு கலாட்டா செய்தனர் கடை ஊழியர்கள்.
உள்ளே போய் உள்ளாடை உள்ளிட்டவற்றைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த பெண்களும், ஆண்களும், திடீரென பெரிய சைஸில் பெருச்சாளி உள்ளே வந்ததைப் பார்த்து அலறி அடித்தபடி வெளியே ஓடி வந்தனர். அதை வீடியோவில் படம் பிடித்த கடைக்காரர்கள், அந்த ஆண்களையும், பெண்களையும் இது ஜாலியானதுதான், பயப்படாதீர்கள் என்று ஆறுதல் கூறி பரிசுகளையும் கொடுத்து அனுப்பி வைத்தனராம்.
இதெல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரியலையாப்பா....!












Click it and Unblock the Notifications