அடைக்கலம் கோருவதற்கு இந்தியா ஒன்னும் திறந்த வீடு அல்ல: ஸ்னோடென் பற்றி சல்மான் குர்ஷித்!

Subscribe to Oneindia Tamil

India not an open house for asylums: Salman Khurshid
பந்தர் சேர்பெக்ன்வான்(புருனே): உலக நாடுகளை அமெரிக்கா எப்படியெல்லாம் உளவு பார்த்தது என்பதை அம்பலப்படுத்திய ஸ்னோடென் இந்தியாவில் அடைக்கலம் கோரியதாக வெளியான செய்திகள் குறித்து கருத்து தெரிவித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், அனைவரும் தஞ்சமடைய இந்தியா ஒன்றும் திறந்த வீடு அல்ல என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவினால் தேடப்பட்டு வருகிறவர் ஸ்னோடென். தற்போது மாஸ்கோ விமான நிலையத்தில் மாற்று விமானத்துக்காக காத்திருக்கிறார். இதனிடையே அவர் இந்தியா, ஈகுவடார் உள்ளிட்ட 20 நாடுகளிடம் அடைக்கல கோரி கடிதம் எழுதியிருப்பதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டது.

இதுபற்றி புருனேவில் நடைபெறும் ஏசியான் மாநாட்டுக்குச் சென்றுள்ள சல்மான் குர்ஷித்திடம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சல்மான் குர்ஷித், இத்பற்றி நான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. கடந்த காலங்களில் இந்தியா அடைக்கலம் கொடுத்திருக்கிறது. ஆனால் அடைக்கலம் கோருகிறவர்கள் அனைவரும் இந்தியா வர இது ஒன்றும் திறந்த வீடல்ல.. எங்களுக்கும் சில கொள்கைகள் இருக்கின்றன என்றார்.

ஏற்கெனவே விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே இந்தியாவிடம் அடைக்கலம் கோரி கடிதம் அனுப்பியதாக செய்திகள் வெளியாகி இருந்தன. அப்படி ஒரு கடிதமே எங்களிடம் இல்லை என்று மத்திய அரசு சாதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+