நிலக்கரியை மறந்தது நானா? அதிமுக அரசா?: கருணாநிதி கேள்வி

Subscribe to Oneindia Tamil

Have i forgotten NLC issue for Kanimozhi?: Karunanidhi
சென்னை: நிலக்கரியை மறந்தது நானா? அதிமுக அரசா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

என்.எல்.சி. பங்கு விற்பனை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கனிமொழிக்குப் பதவி கிடைத்ததும், நிலக்கரியை நான் (கருணாநிதி) மறந்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 13 ஆயிரம் பேர் 10 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி, 2012 ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசும், மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும் உடனடியாக நெய்வேலி நிர்வாகத்தோடு தொடர்பு கொண்டு பேசி, பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்று நான் கோரியிருந்தேன்.

ஆனால் இந்தப் பிரச்சனை தொடர்பாக சட்டப்பேரவையில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது, என்.எல்.சி. தொழிலாளர் போராட்டப் பிரச்னை தமிழக அரசின் அதிகார வரம்புக்குள் வருவது இல்லை என்று அரசின் சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

நிலக்கரியை மறந்தது நானா? அதிமுக அரசா? கடந்த ஆண்டு மத்திய அரசின் சார்பில் என்.எல்.சி. பங்குகளை விற்பதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்ட நேரத்தில், இது தொழிலாளர்களை வம்புக்கு இழுக்கும் செயல். மத்திய அரசு மேலும் எதிர்ப்பைத் தேடிக்கொள்ள வேண்டாம் என்று எச்சரிப்பதாக அறிக்கை விடுத்திருந்தேன்.

மேலும் ஜூன் 26-ஆம் தேதி என்.எல்.சி. தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், பங்குகள் விற்பதைவிட மாற்று வழியை ஆராயுமாறு பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தையும் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் கனிமொழிக்காக நிலக்கரியை மறந்துவிட்டேன் என்று குற்றம்சாட்டி அறிக்கை விடுவது என்ன பெருந்தன்மை?

மத்திய நிறுவனத்தின் பங்குகளை மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்குவது பற்றி பரிசீலிக்க வேண்டும் எனறு மத்திய அமைச்சர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை, தமிழக அரசிடம் கொடுக்கத் தயாராக உள்ளோம். கூடுதலாக 5 சதவீத பங்குகளைக்கூட கொடுக்கத் தயாராக உள்ளோம் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா என்.எல்.சி. பங்குகளைக் கோரி ஜூலை 2-ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

எனவே, ஜெயலலிதா அறிவித்துள்ள ஆர்ப்பாட்டம் நிலக்கரிக்காகவா, சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக சார்பில் ஜூலை 8-ஆம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்காகவா அல்லது அதிமுகவின் ஆர்ப்பாட்டத்தால் தான் நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பங்குகளை தமிழக அரசுக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்தது என்று சொல்வதற்காகவா என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+